சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் குடியரசு தலைவர்!

 

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் குடியரசு தலைவர்!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பூரண குணமடைந்ததையடுத்து தனது குடியரசு தலைவர் மாளிகைக்கு திரும்பியுள்ளார்.

கடந்த மாதம் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் ரெஃபரல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 75 வயதாகும் ராம் நாத் கோவிந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்/

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் குடியரசு தலைவர்!

கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி காலை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்க்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் மருத்துவமனையிலேயே ஓய்வில் இருந்து வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை பூரண குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர், இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு திரும்பினார்.

தான் குணமடைய பிராத்தனை செய்தவர்களுக்கும், எய்ம்ஸ் மற்றும் இராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலிய பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த வீட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.