10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எப்போது? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

 

10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எப்போது? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

கொரோனா காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் சிபிஎஸ்இ தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது. இதேபோல் நடப்பு கல்வியாண்டிற்கான ( 2020-2021 ) 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து தமிழக அரசு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எப்போது? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. இறுதியில் இந்தத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் நடப்பாண்டுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று காரணமாக 2021 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது எனவும் மாணவர்கள், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.