முதலீட்டாளர்களை கை விடாத பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம்….

 

முதலீட்டாளர்களை கை விடாத பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம்….

இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றத்தை சந்தித்தது. இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான கடந்த திங்கட்கிழமையன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. இருப்பினும் செவ்வாய்கிழமையன்று பங்கு வர்த்தகம் எழுச்சி கண்டது. புதன்கிழமை வர்த்தகம் மீண்டும் சரிவை சந்தித்தது. வாரத்தின் கடைசி 2 வர்த்தக தினங்களும் (வியாழன், வெள்ளி) பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. கொரோனா வைரஸ் நிலவரம், எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

முதலீட்டாளர்களை கை விடாத பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம்….

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.137.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.133.98 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.52 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களை கை விடாத பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம்….

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 950.84 புள்ளிகள் உயர்ந்து 34,731.73 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 271.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,244.40 புள்ளிகளில் முடிவுற்றது.