சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்!

 

சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்!

சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் அடைந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நடைபெற்றுவரும் சூழலில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில் பல்வேறு உண்மைகளும், திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தன.

சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்!

இந்நிலையில் சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஏடிஎஸ்பி பார்த்திபன், புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஏடிஎஸ்பி குமார் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பியாக கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.