மக்களே… உங்களால் மட்டுமே இது முடியும் : ராமதாஸ் ட்வீட்!

 

மக்களே… உங்களால் மட்டுமே இது முடியும் : ராமதாஸ் ட்வீட்!

தமிழகத்தில் பாதிப்பு குறைந்தாலும் தினசரி கொரோனா தொற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களே… உங்களால் மட்டுமே இது முடியும் : ராமதாஸ் ட்வீட்!

அந்த பதிவில், “மக்களே சிந்திப்பீர்…. செயல்படுவீர்! தேசிய அளவிலான தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருப்பது மிகவும் நிம்மதியளிக்கிறது. ஆனாலும், தினசரி கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு தான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கேரளாவுக்கு இரண்டாவது இடம்!

முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு வர தமிழ்நாட்டு மக்களாகிய உங்களால் முடியும். உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளையும், ஊரடங்கையும் கடைபிடியுங்கள். கொரோனாவை கட்டுப்படுத்த உதவுங்கள்!” என்று குறிப்பிட்டள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 35 ஆயிரத்துக்கு மேல் இருந்த பாதிப்பு தற்போது 17 ஆயிரமாக குறைந்துள்ளது. இருப்பினும், இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு போராடிக் கொண்டிருக்கிறது. அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதை பொருட்படுத்தாமல் மக்கள் பொது இடங்களில் சுற்றித் திரியும் நிலையில், ராமதாஸ் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.