”தனது கோரிக்கையை 2 வாரங்களில் நிறைவேற்றிய திமுக அரசு” மகிழ்ச்சியில் ராமதாஸ்

 

”தனது கோரிக்கையை 2 வாரங்களில் நிறைவேற்றிய திமுக அரசு” மகிழ்ச்சியில் ராமதாஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் தெரிவித்துள்ளார்.

”தனது கோரிக்கையை 2 வாரங்களில் நிறைவேற்றிய திமுக அரசு” மகிழ்ச்சியில் ராமதாஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது எனவும் இதற்காக தனியாக சான்றிதழ் பெற தேவையில்லை எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராமதாஸ், “தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்படவுள்ள சான்றிதழ்களும் அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது! ஆசிரியர் தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள் முழுமைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. கடைசியாக கடந்த 10-ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தேன். இரு வாரங்களில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.