இந்த தேர்தலோடு திமுக அத்தியாயம் முடிவுக்கு வரும்- ராமதாஸ்

 

இந்த தேர்தலோடு திமுக அத்தியாயம் முடிவுக்கு வரும்- ராமதாஸ்

ராணிப்பேட்டை ஆற்காட்டில் பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகனை ஆதரித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “ஆற்காட்டில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக, பாமக தேர்தல் அறிக்கைகள் அரசாணை போன்றது, திமுக அறிக்கை திவாலானது, காப்பியடித்த தேர்தல் அறிக்கை.. அதிமுக தேர்தல் அறிக்கையோ அள்ள அள்ள குறையாத அமுத சுரபி.

இந்த தேர்தலோடு திமுக அத்தியாயம் முடிவுக்கு வரும்- ராமதாஸ்

இந்த தேர்தலோடு திமுக அத்தியாயம் முடிவுக்கு வரும். சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வர் பழனிசாமி ஒரு விவசாயி, நானும் ஒரு விவசாயி. நாங்கள் 2 பேரும் ஒன்று சேர்ந்து விவசாயிகளுக்கு என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். கொரோனா காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருந்த நான் தேர்தல் பிரச்சாரத்திற்காக தற்போது வெளியே வர தொடங்கியுள்ளேன். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் கொரோனாவிலிருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.