வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் இராமமூர்த்தி நாய் என விமர்சித்த ராமதாஸ்

 

வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் இராமமூர்த்தி நாய் என விமர்சித்த ராமதாஸ்


சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இட ஒதுக்கீடு குறித்த ஒரு நிருபரின் கேள்விக்கு எதிர்த்தரப்பினரான வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் இராமமூர்த்தியின் நண்பனா நீ…? அந்த நாய் சொல்கிறான் என்று கேள்வி கேட்கிறாயே வெட்கமா இல்லையா? உனக்கு என கேள்வி கேட்ட நிருபரை அருவருக்கத்தக்க வகையில் அநாகரீகமான வார்த்தைகளால் சீண்டினார் பாமக தலைவர் ராமதாஸ்.

வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் இராமமூர்த்தி நாய் என விமர்சித்த ராமதாஸ்

ஏன் ஒப்படி தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு அங்கிருந்த பாமக நிர்வாகிகள் செய்தியாளரிடம் கடுமையாக வாக்குவாத போக்கை கடைப் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகவின் 40 ஆண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவாக உள் ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறினார்.