நாளை ரஷ்யா செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

 

நாளை ரஷ்யா செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை சோவியத் ரஷியா வென்றதன் 75-வது ஆண்டு நினைவு தினத்தை ரஷ்யா சிறப்பாக கொண்டாடுகிறது. இதையொட்டி பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு ஒன்றை மே மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த அணிவகுப்பு தள்ளி வைக்கப்பட்டது.

நாளை ரஷ்யா செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் ராணுவ அணிவகுப்பை பார்வையிடுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் 2 ஆம் உலகப்போர் வெற்றி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.