ஆம்பூர் அருகே ராஜீவ்காந்தி சிலை உடைப்பு… மர்மநபர்கள் மீது காங்கிரஸ் சார்பில் புகார்…

 

ஆம்பூர் அருகே ராஜீவ்காந்தி சிலை உடைப்பு… மர்மநபர்கள் மீது காங்கிரஸ் சார்பில் புகார்…

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை நிறுவப்பட்டு உள்ளது. 29 ஆண்டுகள் பழமையான இந்த சிலையை, நேற்றிரவு சமூக விரோதிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தி விட்டு, சாலையோரம் வீசி சென்றனர். காலையில் சிலை உடைக்கப்பட்டதை அறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அந்த பகுதியில் திரண்டு, மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் அருகே ராஜீவ்காந்தி சிலை உடைப்பு… மர்மநபர்கள் மீது காங்கிரஸ் சார்பில் புகார்…

அதனை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசாரிடம் நேரில் புகார் அளித்தனர். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே சிலை உடைப்பு சம்பவம் காரணமாக விண்ணமங்கலம் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.