ரஜினியின் அரசியல் பிரவேசம் : பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணியை ஆரம்பம்!
Dec 5, 2020, 12:04 IST1607150071000
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை நடிகர் ரஜினிகாந்த் துரிதப்படுத்தியுள்ளார்.
மீதமுள்ள பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க விரைவில் உத்தரவிடுகிறார் ரஜினி. இதுவரை 47 ஆயிரத்து 520 பூத் கமிட்டிக்கு ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர், தூத்துக்குடி, தர்மபுரி, நீலகிரி, மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்ற பூத் கமிட்டி பணி 90 சதவிதம் நிறைவு பெற்றுள்ளது.
ஒரு பூத் கமிட்டிக்கு 30 உறுப்பினர்கள் வீதம் சேர்த்து வந்த நிலையில் 2019 பிப்ரவரி 17 அப்பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31ல் ரஜினி அறிவிக்கவுள்ள நிலையில் அரசியல் பணிகளை தொடங்கியுள்ளார்.