“சிறப்பாக வேலை செய்தால் கட்சியில் உரிய பதவி வழங்கப்படும்” : ரஜினிகாந்தின் சகோதரர் உறுதி!

 

“சிறப்பாக வேலை செய்தால் கட்சியில் உரிய பதவி வழங்கப்படும்” : ரஜினிகாந்தின் சகோதரர் உறுதி!

ரஜினியின் கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அவரது அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

“சிறப்பாக வேலை செய்தால் கட்சியில் உரிய பதவி வழங்கப்படும்” : ரஜினிகாந்தின் சகோதரர் உறுதி!

திருவண்ணாமலை அருணகிரி நாதர் கோயிலில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா சிறப்பு யாகம் நடத்தினார். ரஜினியின் பிறந்த நாள் மற்றும் அவர் தொடங்க உள்ள கட்சி தேர்தலில் வெற்றிபெற சத்யநாராயணா யாகம் நடத்தினார்.

“சிறப்பாக வேலை செய்தால் கட்சியில் உரிய பதவி வழங்கப்படும்” : ரஜினிகாந்தின் சகோதரர் உறுதி!

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரஜினி மக்கள் மன்றத்தில் சிறப்பாக உழைப்பவர்களுக்கு கட்சியில் உரிய பதவி வழங்கப்படும் . தற்போது கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது . தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி தராததால் அதற்கான பணிகள் நடந்து வருகிறது . அனுமதி கிடைத்ததும் கட்சி பதிவு செய்யப்படும். பல முக்கிய பிரமுகர்கள் ரஜினியின் கட்சியில் இணைய உள்ளார்கள். அதற்கான பணிகளும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக ஆட்சியை மக்கள் மாற்ற வேண்டும்; திராவிட இயக்கங்களுக்கு இது கடைசி காலம். தமிழகத்தில் லஞ்சம் ஒழிய வேண்டும். கல்வியை வளர்க்க வேண்டும் என்பதுதான் ரஜினியின் ஆசை. ரஜினி குறித்தான விமர்சனங்களுக்கு அவர் வரும் ஜனவரி மாதம் பதிலடி கொடுப்பார் ” என்றார்.