மருத்துவ பரிசோதனை முடிந்தது; நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

 

மருத்துவ பரிசோதனை முடிந்தது; நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக பிரச்சினை இருந்ததால் அவர் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சையை தொடர்ந்து அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதித்து வருகிறார். கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த போது அமெரிக்கா செல்ல முடியாமல் தவித்து வந்த ரஜினிகாந்த், பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

மருத்துவ பரிசோதனை முடிந்தது; நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்தது. அதன் படி, தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், மயோ கிளினிக்கிலிருந்து ரஜினிகாந்த் தனது மகளுடன் வெளியே நடந்து வருவது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது. அந்த புகைப்படத்தை தவிர, ரஜினி உடல்நலம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. அவரது ரசிகர்கள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இதையடுத்து ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விளக்கமளித்த கவிஞர் வைரமுத்து, ரஜினிகாந்துக்கு மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்ததாகவும் தம்மை அழைத்து அவரே செல்போனில் பேசியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்ததால் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.