பிப்ரவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்த்?

 

பிப்ரவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்த்?

ரஜினியின் அரசியல் வருகையை மக்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லை, அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றினார். இதன் பின்னர், இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அவரது நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதன் பணியும் முடிந்துவிட்டது. தற்போது, ரஜினி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர வேண்டியதுதான் பாக்கி.

பிப்ரவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த் ஏப்ரலில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட் கூறியிருந்தார். கொரோனாவால் தற்போது அந்த அறிவிப்பு தள்ளிபோய் விட்டது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ரஜினிகாந்த் மதுரையில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் புதிய கட்சி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு கட்சி குறித்து அறிவிக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.