இ-பாஸ் வாங்கித்தான் ரஜினி காரில் சென்றார்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

 

இ-பாஸ் வாங்கித்தான் ரஜினி காரில் சென்றார்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இ-பாஸ் வாங்கிக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு ரஜினிகாந்த் சென்றார் என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்தபடி கார் ஓட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று கடந்த 20-ம் தேதி வைரலானது. அவர் எங்கு சென்றார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த கேள்விக்கு அடுத்த நாள் ரஜினி பதில் அளித்துவிட்டார். கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகன், பேரனுடன் இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியானது.

இதையடுத்து ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் பெற்று தான் கேளம்பாக்கத்துக்குச் சென்றாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா என ஆய்வு செய்து பின்னர் தெரிவிக்கப்படும்” என்றார்.

இ-பாஸ் வாங்கித்தான் ரஜினி காரில் சென்றார்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

 

இந்நிலையில் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு செல்வதற்கு இ-பாஸ் எடுத்துள்ளார். அந்த இ-பாஸில் மருத்துவ காரணங்களுக்காக செல்வதாகவும், கார் ஓட்டுநர் உடன் இன்னோவா காரில் பயணிப்பதாகவும் தகவல் இடம் பெற்றுள்ளது. அவருக்கு இ-பாஸ் வழங்கப்பட்ட தேதியாக ஜூலை 22-ம் தேதியும், பயண தேதியாக ஜூலை 23-ம் தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை அவர் 21-ம் தேதி கேளம்பாக்கம் சென்று வந்ததற்கான இ-பாஸ் விவரங்கள் வெளிவரவில்லை என்பதால் சென்னை மாநகராட்சி விரைவில் அதற்கான விவரங்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரஜினிகாந்த் இ-பாஸ் குறித்து அரசு தரப்பில் எதுவும் விளக்கம் அளிக்கப்படவில்லை.