ரஜினி அறிவிப்பு- ஏமாற்றத்தில் பேனரை கொளுத்திய ரசிகர்

 

ரஜினி அறிவிப்பு-  ஏமாற்றத்தில் பேனரை கொளுத்திய ரசிகர்

திருச்சி

நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டார். அவரது அறிவிப்பை கேட்டு, தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆண்டாள் தெருவில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் பரமசிவம் என்பவர், ரஜினியின் அறிவிப்பைக் கேட்டு ஆத்திரத்தில் அவரது பேனரை எரித்து கோபத்தை வெளிப்படுத்தினார்.

ரஜினி அறிவிப்பு-  ஏமாற்றத்தில் பேனரை கொளுத்திய ரசிகர்

மேலும், ரஜினி இத்தனை காலம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த தனக்கு, இப்படி ஒரு அறிவிப்பை கேட்டு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். பேனர் எரிப்பு சம்பவம் காரணமாக திருச்சி நந்திகோயில தெருவில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.