திருமணமான பெண்ணுடன் 24 வயது இளைஞருக்கு ஏற்பட்ட காதல்: அடித்து சிறுநீர் குடிக்க வைத்த ஊர்மக்கள்!
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் பேவ் பலாடி கிராமத்தைச் சேர்ந்த 24வயது இளைஞர் தனது மாமா வீட்டுக்கு சென்ற போது அவரை மர்ம நபர்கள் சிலர் பிடித்து சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக அம்மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இணையத்தில் வீடியோவை சிலர் டேக் செய்துள்ளனர்.
இதையடுத்து இந்த வீடியோ அதிகாரிகளின் பார்வைக்கு செல்ல இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞர் தனது மாமா வீட்டுக்கு சென்று வந்த போது அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இந்த கிராமத்து மக்கள் இளைஞரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்துள்ளது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் ஈடுப்பட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் இதில் சம்மந்தபட்ட மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.