“சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை ” : வானிலை ஆய்வு மையம்

 

“சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை ” : வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

“சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை ” : வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கோவை, நீலகிரியில் மழை பெய்யக் கூடும் என்று கூறியுள்ளது.

“சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை ” : வானிலை ஆய்வு மையம்

அதேபோல் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டி இலங்கை கடற்பகுதியில் உள்ள சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நாளை இடியுடன் மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது