அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வெப்பசலனத்தின் காரணமாக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வெப்ப சலனத்தின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி , சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல் ,தேனி ,தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நாளை முதல் 23ஆம் தேதி வரை கேரளா கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் மேற்கு மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் , அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது.