“இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்” : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

“இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்” : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும். வருகின்ற 31-ஆம் தேதி கோயம்புத்தூர் , நீலகிரி மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

“இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்” : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வருகின்ற 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயமுத்தூர், நீலகிரி ,தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

“இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்” : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று முதல் வருகின்ற இரண்டாம் தேதி வரை மன்னார் வளைகுடாப் பகுதி, வடக்கு வங்க கடல், தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.