தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை!

 

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை!

இந்நிலையில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.நாளை தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும்  காணப்படும்.

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை!

அதேபோல் வருகின்ற 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகம் , புதுவை , காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் , காலை நேரங்களில் லேசான பனி மூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31,  குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.