‘வேலை கிடைக்காததற்கு மோடி தான் காரணம்’ – ராகுல் காந்தி காட்டம்!

 

‘வேலை கிடைக்காததற்கு மோடி தான் காரணம்’ – ராகுல் காந்தி காட்டம்!

தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு மோடி தான் காரணம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது. அந்த வகையில் மூன்று நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கொங்கு மண்டலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். கோவையில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, நான் தமிழன் அல்ல; தமிழ் கலாச்சாரத்தை உணர்ந்திருக்கிறேன். தமிழ் மக்களை பாஜக அரசு அவமதிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். நரேந்திர மோடி ஆட்சியில் பிரிவினைவாதம் அதிகரித்திருக்கிறது. பல விவகாரங்களில் இந்தியாவிற்கே தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது என தெரிவித்திருந்தார்.

‘வேலை கிடைக்காததற்கு மோடி தான் காரணம்’ – ராகுல் காந்தி காட்டம்!

இதைத் தொடர்ந்து, நேற்று திருப்பூரில் அதிரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராகுல் காந்தி. அங்கும், பிரச்சாரத்தின் போது பாஜக அரசுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். இந்த நிலையில் இன்று கரூரில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு பேசிய அவர், இந்தியாவில் விவசாயத்தை அழிக்கவே மத்திய அரசு அந்த மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு அவர்கள் காரணம் அல்ல; மோடி தான் காரணம் என்று கூறிய அவர், விவசாயத்தை 3 கார்ப்பரேட் முதலாளிகளிடம் மோடி கொடுத்து விட்டதாகவும் கூறினார்.