பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.. பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

 

பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.. பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் குப்பைகள் இல்லாத இந்தியா என்னும் தூய்மை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சுதந்திர தினம் வரை ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் நடைபெறும் குப்பை இல்லாத இந்தியா பிரச்சாரத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். தூய்மையும், பொது சுகாதாரமும் நம் வாழ்வில் முக்கியமானவை. எனவே தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் தற்போது மட்டுமில்லாமல் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.. பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

அண்மையில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நிலவி வந்தபோது, இந்திய பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து கூறிவந்தது. ஆனால் இந்திய எல்லையில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.

பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.. பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

தற்போது இந்த விவகாரத்தை தூய்மை இந்திய பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்தி ராகுல் காந்தி பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், ஏன் கூடாது! அதனுடன் ஒரு படி மேலே சென்று நாட்டில் அதிகரித்து வரும் பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். சீன அத்துமீறல்கள் குறித்த உண்மைகளை நாட்டிடம் கூறி பிரதமர் மோடி சத்தியாகிரகத்தை தொடங்குவாரா? என கிண்டலாக பதிவு செய்து இருந்தார்.