வேலை, தடுப்பூசி தேவை..ஆனால் பொய்யான வாக்குறுதி, கிண்டலை மோடி அரசு கொடுக்கிறது.. ராகுல் காந்தி

 

வேலை, தடுப்பூசி தேவை..ஆனால் பொய்யான வாக்குறுதி, கிண்டலை மோடி அரசு கொடுக்கிறது.. ராகுல் காந்தி

நாட்டுக்கு வேலை, தடுப்பூசி தேவை ஆனால் பொய்யான வாக்குறுதி, கிண்டலை மோடி அரசு கொடுக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

பொருளாதார வீழ்ச்சி, சீன ஊடுருவல், வேலையின்மை, கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு விஷங்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துதல் விவகாரத்திலும் மத்திய அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

வேலை, தடுப்பூசி தேவை..ஆனால் பொய்யான வாக்குறுதி, கிண்டலை மோடி அரசு கொடுக்கிறது.. ராகுல் காந்தி
கொரோனா தடுப்பூசி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் மத்திய பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி ஒரு டிவிட்டில், இந்தியாவுக்கு என்ன தேவை? வேலைகள் மற்றும் தடுப்பூசி. பா.ஜ.க. அரசு என்ன தருகிறது? பொய் வாக்குறுதிகள் மற்றும் கிண்டல் என பதிவு செய்துள்ளார்.

வேலை, தடுப்பூசி தேவை..ஆனால் பொய்யான வாக்குறுதி, கிண்டலை மோடி அரசு கொடுக்கிறது.. ராகுல் காந்தி
பா.ஜ.க.

முன்னதாக மற்றொரு டிவிட்டில், மத்திய அரசின் தோல்வியடைந்த கொள்கைகளால் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுத்தன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற தடுப்பூசி போடுவதை தவிர அவர்களின் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டும். ஆனால் ஆணவ அரசாங்கம் நல்ல பரிந்துரைகளை ஏற்காமல் உள்ளது என பதிவு செய்து இருந்தார்.