முதல்வர் ஸ்டாலினுக்கு ராகவா லாரன்ஸ் நன்றி!!

 

முதல்வர் ஸ்டாலினுக்கு ராகவா லாரன்ஸ் நன்றி!!

பெண் காவலர்கள் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகளில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். குடிநீருக்கும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் வசதியில்லாததால் பெண் காவலர்கள் சிரமங்களை சந்தித்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு ராகவா லாரன்ஸ் நன்றி!!

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாலையில் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும் போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காகவும், அவசர தேவைக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்; நானும் வந்திருக்கிறேன்; அந்த வகையில் இந்த ஆணையை கண்டு மனம் நிம்மதி அடைந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.