“அப்படி சொல்லாதடா சாரி… மனசுலாம் வலிக்கறது” – ‘அம்பியாக’ மாறி மஞ்ச்ரேக்கரை கலாய்த்த அஸ்வின்!

 

“அப்படி சொல்லாதடா சாரி… மனசுலாம் வலிக்கறது” – ‘அம்பியாக’ மாறி மஞ்ச்ரேக்கரை கலாய்த்த அஸ்வின்!

சஞ்சய் மஞ்சரேக்கர் கிரிக்கெட் விளையாடிய காலக்கட்டத்தில் பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும், இப்போது ஆப் ஸ்கிரீனில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்வார். மும்பை வீரர்கள் மட்டுமே இவரது கண்களுக்கு உலகிலேயே மிகச் சிறந்த வீரர்களாக தெரிவார்கள். மற்ற வீரர்கள் எல்லாம் அவருக்கு பொழுதுபோக்குக்காக கிரிக்கெட் விளையாடுபவர்களாகவே தெரிவார்கள். இவருக்கும் ஜடேஜாவுக்கும் இருக்கும் பனிப்போர் அனைவரும் அறிந்ததே.

“அப்படி சொல்லாதடா சாரி… மனசுலாம் வலிக்கறது” – ‘அம்பியாக’ மாறி மஞ்ச்ரேக்கரை கலாய்த்த அஸ்வின்!

தற்போது அஸ்வினிடம் ஒரண்டை இழுத்திருக்கிறார். சமீபத்தில் பேட்டியளித்த சஞ்சய் மஞ்சரேக்கர், “அஸ்வினை சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக தான் கருதவில்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வின் இதுவரை ஒரு முறை கூட ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்பதே அதற்குக் காரணம். அவர் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்திய களங்களில்தான் (Home Track Bully) அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதனால் தான் அஸ்வினை கிரிக்கெட் உலகின் என்றும் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக என்னால் பாராட்ட முடியவில்லை” என்றார்.

“அப்படி சொல்லாதடா சாரி… மனசுலாம் வலிக்கறது” – ‘அம்பியாக’ மாறி மஞ்ச்ரேக்கரை கலாய்த்த அஸ்வின்!

இதோடு நில்லாமல் இதுதொடர்பாக ட்வீட் செய்திருந்த அவர், “All-Time Great என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பாராட்டு. டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் போன்ற கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் All-Time Great என்ற எனது பாராட்டுக்குரிய ஜாம்பவான்கள். ஆனால் அஸ்வின் இன்னும் என்னுடைய லிஸ்டில் இணையவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அஸ்வின் அவரது ட்வீட்டை ரீட்வீட் செய்த அஸ்வின், அந்நியன் அம்பி மீமை ஷேர் செய்து கலாய்த்துள்ளார். அதில் பேமஸான மீம் டெம்ப்ளெட்டான “அப்படி சொல்லதடா சாரி… மனசெல்லாம் வலிக்கிறது” என்பதைப் பகிர்ந்துள்ளார்.