இந்த கிழமையில் திருஷ்டி சுற்றி போடுங்கள்…கடன் தொல்லை நீங்கும்!

 

இந்த கிழமையில் திருஷ்டி சுற்றி போடுங்கள்…கடன் தொல்லை நீங்கும்!

வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மாலை நேரத்தில் திருஷ்டி சுற்றி போடுவது மூலம் உங்களுக்கு இருந்த தடைகள் விலகும், காரியங்களில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமித்த உடன் உங்கள் குடும்பத்தாரை அமர வைத்து திருஷ்டி சுற்றி போடுங்கள் . கிழக்கு நோக்கி அல்லது வீட்டு வாசலை பார்த்தவாறு உட்காரவைத்து பூசணிக்காய், எலுமிச்சை பழம் அல்லது தேங்காய் கொண்டு திருஷ்டி சுற்றி போடுவது மிகவும் நல்லது.

இந்த கிழமையில் திருஷ்டி சுற்றி போடுங்கள்…கடன் தொல்லை நீங்கும்!

பூசணிக்காயின் ஒரு பகுதியில் லேசாக சதுர வடிவில் வெட்டி அதனுள் குங்குமம், சில்லறை காசுகள் ஆகியவற்றைப் போடுங்கள். குறிப்பாக வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து சில்லறை காசுகளை போட்டு செல்லுங்கள் . பிறகு உங்கள் குடும்பத்தினரை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். தேங்காய் மீது சூடம் ஏற்றியும், எலுமிச்சை மீது சூடம் ஏற்றியும் திருஷ்டி கழிக்கலாம். அழிக்கலாம். திருஷ்டி சுற்றிய தேங்காயை முச்சந்தியில் உடைக்க வேண்டும். அதேபோல் எலுமிச்சை பழத்தை நான்காகப் பிரித்து நான்கு திசையிலும் வீசி விடுங்கள்.

இந்த கிழமையில் திருஷ்டி சுற்றி போடுங்கள்…கடன் தொல்லை நீங்கும்!

இப்படி வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் திருஷ்டி சுற்றி போடுவதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள தடைகள் நீங்கி, சுப காரியங்கள் நடைபெறும். கடன் தொல்லையில் இருந்தும் நீங்கள் விரைவில் மீளலாம்.