7 வருட ஏக்கம்… என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே… தோனி குறித்து நெகிழ்ந்த புஜாரா!

 

7 வருட ஏக்கம்… என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே… தோனி குறித்து நெகிழ்ந்த புஜாரா!

என்ன தான் புஜாரா டெஸ்ட் உலகின் அசைக்கு முடியாத சக்தியாக வலம் வந்தாலும் அவருக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணி கூட இடம் அளிக்கவில்லை என்பதே நிதர்சனம். ஒருநாள் போட்டிகளில் அவர் வெறும் ஐந்தே போட்டிகளிலெயே ஆடியுள்ளார் என்பது முகத்தில் அறையும் பேருண்மை. டி20 போட்டிகளில் சொல்லவே வேண்டாம். அதிலும் அதிரடிக்குப் பஞ்சமில்லாத ஐபிஎல் தொடரில் சுத்தம்.

7 வருட ஏக்கம்… என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே… தோனி குறித்து நெகிழ்ந்த புஜாரா!

கொல்கத்தா, ஆர்சிபி, பஞ்சாப் என மூன்று வெவ்வேறு அணிகளில் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை புஜாரா ஐபிஎல்லில் களமிறங்கியிருக்கிறார். அன்றிலிருந்து அவர் ஆறு முறை ஏலப்பட்டியலில் தன்னுடைய பெயரைப் பதிவுசெய்தும் கேட்பாரின்றி ஒவ்வொரு முறையும் விலை போகாமல் இருந்தார். ஒரு கட்டத்திற்கு விரக்தியின் உச்சிக்குச் சென்ற புஜாரா, தன்னை ஏலத்தில் எடுக்குமாறு வாய் விட்டும் கேட்டுவிட்டார். தனக்கு அனைத்துவிதமான கிரிக்கெட் விளையாட வேண்டும் ஆசை இருக்கிறது; ஆனால் என்னை யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்று மிகவும் நொந்து கூறினார்.

இச்சூழலில் தான் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பாராவிதமாக புஜாராவை சிஎஸ்கே 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. 7 வருடமாக ஐபிஎல்லுக்குள் நுழைய முடியாமல் ஏங்கி தவித்த புஜாராவை ஏலம் எடுத்தவுடன் அனைத்து அணியினரும் கைதட்டி வரவேற்றார்கள். ஏலம் எடுத்து ஐபிஎல்லுக்கு கம்பேக் கொடுத்த சிஎஸ்கேவுக்கு நன்றி தெரிவித்து தனது செல்ல மகளுடன் புஜாரா வீடியோ வெளியிட்டுள்ளார்.

7 வருட ஏக்கம்… என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே… தோனி குறித்து நெகிழ்ந்த புஜாரா!

அந்த வீடியோவில் அவர், “ஐபிஎல்லுக்குள் மீண்டும் நுழைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் சிஎஸ்கேவுக்காக மஞ்சள் நிற ஜெர்சியில் ஆடப்போவது என்பது கற்பனைக்கு எட்டாத மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தோனி கேப்டன்சியின் கீழ் மீண்டும் விளையாடப் போகிறேன். அவர் கேப்டனாக இருக்கும்போது தான் நான் இந்திய அணிக்காக அறிமுகமானேன். அவர் தலைமையின் கீழ் விளையாடிய நினைவுகள் இப்போதும் நிழலாடுகின்றன.

7 வருட ஏக்கம்… என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே… தோனி குறித்து நெகிழ்ந்த புஜாரா!

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை டெஸ்ட் மனநிலையிலிருந்து டி20 போட்டி மனநிலைக்கு மாற வேண்டும். ஐபிஎல்லில் விரைவாகவே கியரை மாற்ற வேண்டும். அதற்காக மனதளவிலும் டெக்னிக்கலாகவும் என்னைத் தயார்படுத்துவேன். இதன்மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்” என்றார்.