எடப்பாடி சர்வாதிகாரி; சசிகலாவால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும் – புகழேந்தி கடும் விமர்சனம்!

 

எடப்பாடி சர்வாதிகாரி; சசிகலாவால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும் – புகழேந்தி கடும் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி என்னும் சர்வாதிகாரி கையில் அதிமுக சிக்கி இருப்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்தார்.

எடப்பாடி சர்வாதிகாரி; சசிகலாவால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும் – புகழேந்தி கடும் விமர்சனம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் புகழேந்தி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தன்னுடன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற அப்பாவு சபாநாயகராக ஆகியிருப்பதால் வாழ்த்து தெரிவிக்க வந்தேன். ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிமுகவை விற்பதற்காக டெல்லியில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் அவர்கள் டெல்லிக்கு சென்று உள்ளார்கள். கட்சியை காப்பாற்றுவதற்கு அல்ல. அதிமுக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி என்னும் சர்வாதிகாரம் கையில் உள்ளது. அவரிடமிருந்து கட்சியை மீட்டெடுக்க சசிகலாவால் மட்டுமே முடியும். தங்களது அடிமை வாழ்வை தொடர்வதற்காக அவர்கள் டெல்லி சென்றிருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும், சசிகலா அழைத்தால் நேரில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் திமுக இல்லையெனில் திராவிட இயக்கத்தை காப்பாற்ற யாரும் கிடையாது என்றும் திராவிட இயக்க சிந்தனையுடைய தனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.