பாமகவால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை! மூண்டது பாமக- அதிமுக இடையே சண்டை

 

பாமகவால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை! மூண்டது பாமக- அதிமுக இடையே சண்டை

ஒவ்வொரு தேர்தலின் போதும் கூட்டணி சேர்வதும், தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் கூட்டணியை விமர்சிப்பது என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

பாமகவால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை! மூண்டது பாமக- அதிமுக இடையே சண்டை

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, “6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. ஆனால் பாமக இல்லையென்றால் அதிமுக 20 தொகுதிகளில் கூட வெற்றிபெற்றிருக்காது என பாமக கூறுவது முறையல்ல.
பாமகவால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை,

மற்ற தொகுதிகளில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி முதலில் பாமக ஆராய வேண்டும். முதலில் கூட்டணியில் இணைவது, பிறகு எங்களால்தான் எல்லாம் நடந்தது என பேசுவதை ஏற்க முடியாது.

அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை தாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால் பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால்தான் அன்புமணி இன்று ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்” எனக் கூறினார்.