புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை! அவருக்கு 6 நாட்களில் திருமணம்…

 

புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை! அவருக்கு 6 நாட்களில் திருமணம்…

புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான மாத்தூரை சேர்ந்த பாலச்சந்தர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

36 வயதான பாலசந்தருக்கு இந்த மாதம் 30 தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் வீட்டிலிருக்கும் தன்னை மர்மநபர்கள் சிலர் கொலை செய்ய வருகிறார்கள் என்று தெரிந்த பாலச்சந்திரன் காரை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் பாலச்சந்திரனை காரிலேயே வைத்து வெட்டிப்படுகொலை செய்தனர்.

புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை! அவருக்கு 6 நாட்களில் திருமணம்…

வெட்டிக்கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் பாலச்சந்தர் மீது புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர், மாத்தூர், திருச்சி மாவட்டம் கண்டோமெண்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 7 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இக்கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாலச்சந்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.