கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!

 

கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!

உலகின் எல்லா இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனுள் இந்தியாவும் ஒன்று. காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்ட இந்த கொரோனாவில் இருந்து மக்களை காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல அந்தந்த மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த கொடிய வகை கொரோனாவின் பிடியில் சிக்கிய மாநிலங்களுள் புதுச்சேரியும் ஒன்று. இதனால் அங்கு தற்போது 52 பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. தேவைப்பட்டால் புதுச்சேரி முழுவதிலும் கூட முழுமுடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

81 new COVID-19 cases in Puducherry on Sunday - The Hindu

இந்நிலையில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில்  ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ், அங்கு கொரோனா வார்டில் கழிவறையை சுத்தம் செய்த புகைப்படம் வெளியாகியுள்ளது. முழு பாதுகாப்பு கவச உடைகளை அணிந்தவாறு அவர், கழிவறையை சுத்தம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.