புதுச்சேரியில் பாஜக நிர்வாகிக்கு கொரோனா! மூடப்பட்ட பாஜக நிர்வாகம்

 

புதுச்சேரியில் பாஜக நிர்வாகிக்கு கொரோனா! மூடப்பட்ட பாஜக நிர்வாகம்

புதுச்சேரியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி உருளையன்பேட்டை, வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் அனைவரும் அரசு மருத்துவகல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 95 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நோய் தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் பாஜக நிர்வாகிக்கு கொரோனா! மூடப்பட்ட பாஜக நிர்வாகம்

இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக செயலாளர் மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பாஜக தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.