புதுச்சேரியில் மேலும் 174 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 3,467 ஆக உயர்வு!

 

புதுச்சேரியில் மேலும் 174 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 3,467 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகல் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகரித்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு புதுச்சேரியில் அமலில் இருக்கிறது. புதுச்சேரியில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து இன்று அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்றும் நிவாரண நிதியில் இருந்து ரூ.1.2 கோடி ஒதுக்கி மருத்துவ உபகரணங்கள் வாங்க உள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் மேலும் 174 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு 3,467 ஆக உயர்வு!

இந்த நிலையில், புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. இன்று மேலும் 174 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,467 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் அதிக அளவு பாதிப்பு இருப்பதாகவும் புதுச்சேரியில் 2000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.