‘எந்த குற்ற வழக்காக இருந்தாலும் 24 மணி நேரத்தில் கைது’ – முதல்வர் நாராயணசாமி

 

‘எந்த குற்ற வழக்காக இருந்தாலும் 24 மணி நேரத்தில் கைது’ – முதல்வர் நாராயணசாமி

குற்ற வழக்குகளில் ஈடுபடுவோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், நாடு முழுவதும் மக்கள் தீவிர ஷாப்பிங்கில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளிலும் வீதிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. இது போன்ற நேரங்களில், குற்ற சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

‘எந்த குற்ற வழக்காக இருந்தாலும் 24 மணி நேரத்தில் கைது’ – முதல்வர் நாராயணசாமி

அந்த வகையில் புதுச்சேரியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், எந்தக் குற்ற வழக்காக இருந்தாலும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீபாவளி நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடைகளில் மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதாக புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.