இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு; புதுக்கோட்டையில் பரபரப்பு!

 

இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு; புதுக்கோட்டையில் பரபரப்பு!

கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டை மாவட்டம் போச்சம்பட்டி பகுதியில் இன்று காலை இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.அப்போது ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு; புதுக்கோட்டையில் பரபரப்பு!

இதனிடையே அரிவாள் தாக்குதலால் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த போலீசார் இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் முன் விரோதத்தால் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.