எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

 

எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

பின்னணி பாடகர் எஸ். பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் கடந்த 25 ஆம் தேதி காலமானார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

இந்நிலையில் எஸ்பிபி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் ,பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவிடம் கட்டப்படவுள்ளதாக அவரது மகன் சரண் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..