‘பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

 

‘பப்ஜி’ மதன் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

‘பப்ஜி’ மதன் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது!

யூடியூபில் பப்ஜி விளையாட்டு மூலம் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்து வந்த பஜ்ஜி மதன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தொழில் ரீதியாக 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

‘பப்ஜி’ மதன் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது!

இதனிடையே அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டதுடன் 8 மாத கைக்குழந்தையுடன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் குழந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் பப்ஜி மதனுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது .சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டதால் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அங்கும் அவரது ஜாமீன் மனுவை நீதிபதிகள் ஏற்கவில்லை.

‘பப்ஜி’ மதன் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது!

இந்நிலையில் யூடியூபில் ஆபாசமாக பேசி பண மோசடி செய்த மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இரண்டு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசி பணம் சம்பாதித்தார் மதன். ஆதரவற்றோருக்கு உதவுவதாக கூறி ஆன்லைனில் பணம் வசூலித்து மோசடி செய்ததாலும் கைதானார் பப்ஜி மதன். பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக உள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.