விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்!

 

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்!

சி.எம்.எஸ்-01 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை சரியாக 3.41 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தகவல் தொடர்புக்கான CMS-01 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இந்த ராக்கெட் செல்கிறது. தகவல் தொடர்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டிற்காக இந்த CMS-01 வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்!

சி-பேண்ட் மூலம் பெறப்படும் அலைவரிசையை இந்தியா, அந்தமான்- நிகோபார், லட்சத்தீவுகளில் பயன்படுத்தலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 6 ஸ்ட்ராப் ஆன்ஸ தொழில்நுட்பத்தில் அனுப்பப்படும் 22 ஆவது பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட் இது என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நடப்பாண்டில் ஏவப்படும் இஸ்ரோவின் 2ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.