மாணவிகளுக்கு பாலியல் தொல்லை … ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்!

 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை … ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்!

சென்னை கேகே நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்ரி தனியார் பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். இவர் ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, ஆபாச படங்கள் இணையதள பக்கங்களை வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்புவது போன்ற செயல்கள் மூலமாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை … ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்!

அதுமட்டுமில்லாமல், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பு எடுப்பதாக மாணவிகள் பலர் இவர் மீது புகார் அளித்துள்ளனர். இரவு நேரங்களில் மாணவிகளுக்கு போன் செய்து தொந்தரவு செய்தல், வகுப்பறையில் ஆபாசமாக பேசுதல் போன்ற பல்வேறு செயல்களை செய்து வந்திருக்கிறார் ராஜகோபால். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இது குறித்து மாணவிகள் சிலர், அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் மூலமாக, பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை … ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்!

மாணவிகள் அளித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் ராஜகோபாலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல குழந்தைகள் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியும் விசாரணை நடத்தி வருகிறார். ராஜகோபாலன் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் உறுதியளித்திருந்தது. அதன் படி, ஆசிரியர் ராஜகோபாலன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.