சென்னையில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், நடத்த தடை- கமிஷ்னர்
Apr 15, 2021, 21:38 IST1618502922000
கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளியில் செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென தொடர்ந்து போலீசார் வலியிறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.