இரவு 10 மணியாகியும் உதயநிதியை விடுதலை செய்யாததால் போராட்டம்!

 

இரவு 10 மணியாகியும் உதயநிதியை விடுதலை செய்யாததால் போராட்டம்!

மயிலாடுதுறையில் அனுமதியின்றி பரப்புரை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதியை இரவு 10 மணியாகியும் விடுதலை செய்யாததால் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. மு.க ஸ்டாலின் நேரடி பிரச்சாரம் ஜனவரி மாதம் தொடங்கவிருக்கும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் தற்போது பரப்புரை செய்து வருகிறார். அரசின் உத்தரவை மீறி கடந்த 2 நாட்களாக பரப்புரை நடத்தி வரும் உதயநிதியை ஆங்காங்கே போலீசார் கைது செய்து வருகின்றனர். திருக்குவளையிலும், நாகை துறைமுகத்திலும் அவர் பிரச்சாரம் நடத்திய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் பரப்புரை செய்த உதயநிதியை போலீசார் கைது செய்தனர்.

இரவு 10 மணியாகியும் உதயநிதியை விடுதலை செய்யாததால் போராட்டம்!

இந்நிலையில் இரவு 10 மணி ஆகியும் உதயநிதியை போலீசார் விடுதலை செய்யவில்லை. அவரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் கொதித்தெழுந்த திமுகவினர் ஒன்றுதிரண்டு உதயநிதியை விடுவிக்கக் கோரி திருமண மண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏன் இதுவரை உதயநிதியை விடுவிக்கவில்லை என்பது குறித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.