திருவண்ணாமலை அருகே பரோட்டா மாஸ்டர் வெட்டிக்கொலை – 4 பேர் கைது!

 

திருவண்ணாமலை அருகே பரோட்டா மாஸ்டர் வெட்டிக்கொலை – 4 பேர் கைது!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக புரோட்டா மாஸ்டரை வெட்டிக்கொன்ற கூலி தொழிலாளி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் வீரானந்தலை சேர்ந்தவர் வெங்கடேசன் (27). இவர் புதுப்பாளையம் பகுதியில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இந்த நிலையில், வெங்கடேசனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மதுசூதனன் என்பவருக்கும் எருது விடும் திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

திருவண்ணாமலை அருகே பரோட்டா மாஸ்டர் வெட்டிக்கொலை – 4 பேர் கைது!

இதனால் வெளியூரில் தங்கியிருந்த வெங்கடேசன், சமீபத்தில் வீரனேந்தலுக்கு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன், தனது நண்பரான தர்மனுடன் உண்ணாமலை பாளையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மதுசூதனன், அவரது தம்பி சுரேஷ் மற்றும் கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து, வெங்கடேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய தர்மன் அளித்த தகவலின் பேரில், புதுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, மதுசூதனன் (33), அவரது தம்பி சுரேஷ் (30), வல்லரசு (26), ஏழுமலை (24) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.