அரசாங்கம் தனது வழி, அணுகுமுறையை மாற்றாவிட்டால் இளைஞர்கள் அரசாங்கத்தை அகற்றுவர்.. பிரியங்கா காந்தி

 

அரசாங்கம் தனது வழி, அணுகுமுறையை மாற்றாவிட்டால் இளைஞர்கள் அரசாங்கத்தை அகற்றுவர்.. பிரியங்கா காந்தி

அரசாங்கம் தனது வழியையும், அணுகுமுறையையும் மாற்றாவிட்டால் இளைஞர்கள் அரசாங்கத்தை அகற்றுவர் என அரசை பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பிரியங்கா காந்தி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உத்தர பிரதேசத்தில் 2016ம் ஆண்டில் 12,460 ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்தவற்கான வேட்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

அரசாங்கம் தனது வழி, அணுகுமுறையை மாற்றாவிட்டால் இளைஞர்கள் அரசாங்கத்தை அகற்றுவர்.. பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி நேற்று டிவிட்டரில், இளைஞர்களின் கோரிக்கைகள் சரியான நேரத்தில் தேர்வுகள், சரியான நேரத்தில் முடிவுகள், நீதிமன்றத்துக்கு செல்லாமல் சேருதல், வேலைகள் அதிகரிப்பு, ரத்து செய்யப்பட வேண்டிய ஒப்பந்த சட்டம். இளைஞர்கள் உயர்ந்துள்ளனர். அரசாங்கம் தனது வழியையும், அணுகுமுறையையும் மாற்றாவிட்டால் இளைஞர்கள் அரசாங்கத்தை அகற்றுவர் என பதிவு செய்து இருந்தார்.

அரசாங்கம் தனது வழி, அணுகுமுறையை மாற்றாவிட்டால் இளைஞர்கள் அரசாங்கத்தை அகற்றுவர்.. பிரியங்கா காந்தி
வேலை வாய்ப்பு

பிரியங்கா காந்தி மற்றொரு டிவிட்டில், 5 ஆண்டு ஒப்பந்த சட்டம் ஒரு கருப்பு சட்டம். இளைஞர்களின் ஆட்சேர்ப்பில் பூட்டுவது அநியாயம். இந்த அநீதிக்கு எதிராக இளைஞர்கள் தங்கள் உரிமைகளை கோரி வீதிகளில் இறங்கினால், அவர்கள் கேட்கப்பட வேண்டும். உங்கள் குச்சிகளால் இந்த இளம் சவாலை அடக்க முடியாது என பதிவு செய்து இருந்தார். பிரியங்கா காந்தி இந்த பதிவுகளை இந்தியில் பதிவு செய்து இருந்தார்.