லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், செவிலியர் பலி!

 

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், செவிலியர் பலி!

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜா. இவரது மனைவி ஜெமிமா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை ஜெமிமா வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் மருத்துமனைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், செவிலியர் பலி!

வெள்ளவேடு அருகே சென்றபோது ஜெமிமா வாகனம் எதிர்பாராத விதமாக, சாலையோரம் நின்ற லாரியின் பின்புறமாக அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமைனக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து டேவிட்ராஜா புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.