தடையை மீறி இயக்கம்: தனியார் பேருந்துகளை திருப்பி அனுப்பிய போலீசார்!

 

தடையை மீறி இயக்கம்: தனியார் பேருந்துகளை திருப்பி அனுப்பிய போலீசார்!

செஞ்சியில் தடையை மீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து 350 கி.மீ நிலை கொண்டிருக்கும் இந்த புயலால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறி மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரையைக் கடக்கும் போது 145 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிகிறது.

தடையை மீறி இயக்கம்: தனியார் பேருந்துகளை திருப்பி அனுப்பிய போலீசார்!

நிவர் புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பேருந்துகள், ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் கூட இயங்காது என அறிவிப்பு வெளியாகயுள்ளது. இத்தகைய சூழலில், செஞ்சி பேருந்து நிலையத்தில் அரசு உத்தரவை மீறி தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில், செஞ்சி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.