தீபாவளியை கொண்டாட கைதிகளுக்கு 3 நாட்கள் பரோல்!

 

தீபாவளியை கொண்டாட   கைதிகளுக்கு 3 நாட்கள் பரோல்!

வேலூர் மத்திய சிறை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது அவரது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளியை கொண்டாட   கைதிகளுக்கு 3 நாட்கள் பரோல்!

தீபாவளி பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால் மக்கள் பல நாட்களுக்கு முன்பே கொரோனா அச்சத்தை பின்னுக்கு தள்ளி கடைகளில் நுழைய ஆரம்பித்தனர். கொரோனா ஊரடங்கான 7 மாதத்திற்கு பிறகு மக்கள் கூட்டம் அலைமோதும் துணிக்கடைகள்,பரிசு பொருட்கள் கடைகள் என பலவற்றையும் காண மகிழ்ச்சியாகவே இருந்தது எனலாம். சாமானியர்கள் வாழ்க்கை இப்படி என்றால் சிறைக்கைதிகள் வாழ்க்கை தீபாவளி பண்டிகையின் போது எப்படி இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

தீபாவளியை கொண்டாட   கைதிகளுக்கு 3 நாட்கள் பரோல்!

இந்நிலையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 20 பேருக்கு 3 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. 20 கைதிகளுக்கு மூன்று நாட்கள் பரோல் வழங்கி வேலூர் மத்திய சிறை துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பரோல் எத்தனை முறை வழங்ப்பட்டுள்ளது, நன்னடத்தை உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு பரோல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.