தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
Oct 19, 2020, 19:43 IST1603116831000
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு மாவட்ட கிளைக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. கோவை மாவட்ட செயலாளர் அரசு முன்னிலையில் நடைபெற்ற இந்த தேர்தலில், மாவட்ட தலைவராக அ.மதியழகன், மாவட்ட செயலாளராக வி.எஸ்.முத்துராமசாமி, பொருளாளராக ஆர்.தங்கராஜ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் இன்று தேர்தல் ஆணையர் அரசு முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஈரோடு மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.