சென்னை காவல் ஆணையருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம்!

 

சென்னை காவல் ஆணையருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம்!

சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம்!

தமிழகத்தில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், இனஸ்பெக்டர் மணிகண்ட பிரபு ஆகிய 3 பேருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டி குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தை சேர்ந்த 17 காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு இடம்பெற்றிருக்கிறார்.