விஜயகாந்த், பிரேமலதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

 

விஜயகாந்த், பிரேமலதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் வழக்கமான சிகிச்சைக்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் சென்னை மணப்பாக்கத்தில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்ததாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

விஜயகாந்த், பிரேமலதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

இதனைத்தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிற்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததால், அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என காலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன் படி, தற்போது விஜயகாந்த் மற்றும் பிரேமலதா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.